Begin typing your search above and press return to search.
முதல்மொழிப் போர் தியாகி குடந்தை தாளமுத்து நினைவேந்தல்
முதல்மொழிப் போர் தியாகி குடந்தை தாளமுத்து நினைவேந்தல்
HIGHLIGHTS
1938முதல் மொழிப்போரில் மாண்ட மறத்தமிழன் தியாகி குடந்தை மண்ணின் மைந்தன் தாளமுத்து நினைவேந்தல் நிகழ்வு நேற்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் குடந்தை காந்தி பூங்காவில் நடைப்பெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் விடுதலைச் சுடர் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளர் வைகறை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பூங்குனறன், மத்திய அரசு ஊழியர் தமிழன் கணேசன், பேரியக்க சாமிமலை கிளைச் தீந்தமிழன் உள்பட பலர் கலந்துகொண்டனர். குடந்தையில் தாளமுத்து நினைவு மண்டபம் கட்டவும், மொழிப் போர் வரலாறை பாடத்தில் சேர்க்கவும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.