/* */

கும்பகோணம் அருகே பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

கும்பகோணம் அருகே பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
X

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ரிஷி, (வயது2). இவரது தாய் அனுஷியா (28), தனது வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து தொழில் செய்கிறார். கணவர் கோவையில் வேலை செய்து வருகின்றார்.

கடந்த 27ஆம் தேதி மாலை பானி பூரிக்கு குருமா குழம்பு பாத்திரத்தை கீழே வைத்திருந்தபோது குழந்தை தவறி குழம்பில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கும்பகோணம் அம்மாசத்திரம் மிட்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 April 2022 4:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...