/* */

கும்பகோணம் வந்த காவிரி: விஜயேந்திர மடத்தின் சார்பில் மலர் தூவி சிறப்பு தீபாராதனை

கும்பகோணத்தில் காவிரியில் தண்ணீர் வந்ததையொட்டி விஜயேந்திர மடத்திலிருந்து மலர் தூவி அபிஷேகம் செய்து வரவேற்பு

HIGHLIGHTS

கும்பகோணம் வந்த காவிரி: விஜயேந்திர மடத்தின் சார்பில் மலர் தூவி சிறப்பு தீபாராதனை
X

கும்பகோணத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்போல் ஜூன் 12ம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வந்தடைந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி, கல்லணை கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று விஜயேந்திர படித்துறையிலிருந்து விஜயேந்திர ராகவேந்திரா மடத்திலிருந்து காவிரியில் தண்ணீர் வந்ததையடுத்து காவிரித் தாய்க்கு நன்றி தெரிவித்து மலர்தூவி அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Updated On: 1 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!