/* */

நிதி நிறுவனம் நடத்தி பணமோசடி: கட்சி இருந்து நீக்கி பாஜக தலைமை கழகம் அறிக்கை

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக கூறப்படும் எம்.ஆர்.கணேசை பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக தலைமை கழகம் அறிக்கை

HIGHLIGHTS

நிதி நிறுவனம் நடத்தி பணமோசடி: கட்சி இருந்து நீக்கி பாஜக தலைமை கழகம் அறிக்கை
X

பாஜக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை. 

ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், இன்று கும்பகோணம் முழுவதும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் ரூ.600 கோடி பொதுமக்களிடமும் வர்த்தகர்களிடம் மோசடி செய்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இந்நிலையில் மோசடி செய்ததாக கூறப்படும் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான எம்.ஆர். கணேஷ் தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக இருந்ததைதொடர்ந்து பா.ஜ.க பிரமுகர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதையடுத்து தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக தலைமைக்கு எம்ஆர் கணேஷ் மீது புகார்கள் சென்றுள்ளது. அதன் அடிப்படையிலும், மாநில தலைமை அறிவுறுத்தலின்படி தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு பதவியில் இருந்து எம்ஆர் கணேஷ் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 July 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?