கும்பகோணம் அருகே நள்ளிரவில் சாலை விபத்து - 2 பர் பலி

கும்பகோணம் அருகே நள்ளிரவில்  சாலை விபத்து -  2 பர் பலி
X
சுந்தரபெருமாள்கோவில் அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில், டிரைவர் உட்பட 2 பேர் பலி உயிரிழந்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில், கும்பகோணம் - தஞ்சை மெயின் ரோட்டில் நள்ளிரவில் விபத்து நேரிட்டது. பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் வந்த டாட்டா ஏசி வாகனத்தை, வளையபேட்டை மாங்குடி சம்பந்தம் மகன் ரமேஷ் (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கும்பகோணம் செம்போடை சேர்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் என்பவர், ரமேஷ் அருகில் உட்கார்ந்து வந்துள்ளார். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற வேன் இந்த டாட்டா ஏசி வாகனம், ஆட்டோ மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே டிரைவர் ரமேஷ் உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். சுவாமிமலை காவல்துறை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில், சுவாமிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய வேன் டிரைவரை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture