/* */

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா

தம்பிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை பெருந்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

HIGHLIGHTS

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா
X

தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்.

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதிஉலா, மாவிளக்கு ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய திருத்தேரோட்டம் காலை 8:30 மணிக்கு முடிவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்ட விழாவில் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்களை அகற்றினர். மேலும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 4 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு