/* */

மாணவர்களுக்கு விருது வழங்கி ஊக்கம் தரும் இருமன்குளம் பள்ளி ஆசிரியர்கள்

சங்கரன்கோவில் அருகே, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றெழுதும் விருது வழங்கி, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.

HIGHLIGHTS

மாணவர்களுக்கு விருது வழங்கி ஊக்கம் தரும் இருமன்குளம் பள்ளி ஆசிரியர்கள்
X

இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு திருக்குறள் முற்றெழுதும் விருது வழங்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளயில் பயிலும் மாணவ மாணவிகள் கொரோனா கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், திருக்குறளின் முக்கியத்துவத்துவத்தை உணர்த்தும் வகையிலும், திருக்குறள் முற்றெழுவதற்காக பயிற்சி மேற்கொள்ளும்படி, ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டது.

அதனை பின்பற்றி, கொரோனா விடுமுறை காலத்தில் மாணவர்கள் திறம்பட பயிற்சி பெற்றனர் .இதன்தொடர்ச்சியாக தற்போது திருக்குறள் முற்றெளுதும் போட்டி நடைபெற்றது. திருக்குறளின் 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து பிழையின்றி தெளிவாக எழுதியவர்களுக்கு, இருமன்குளம் பள்ளியின் சார்பாக சான்றிதழ்கள் , திருக்குறள் புத்தகங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி பிரபா, பட்டதாரி ஆசிரியர்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். ஆசிரியர்களின் இந்த செயலை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 9 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...