புளியங்குடியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

புளியங்குடியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
X

கார்த்திக்

புளியங்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரிடம் ஒன்றை கிலோ கஞ்சா இருப்பதையும், அவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சார்ந்த பூலித்துறை மகன் கார்த்திக் (20) என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai marketing future