/* */

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

செங்கோட்டை அரசு மருத்துவமனையில்   கொரோனா நோயாளி தற்கொலை
X

தென்காசி மாவட்டம் பூலான் குடியிருப்பு வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த பத்தாம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து யாரிடமும் பேசாமல் தனியாகவும், சோர்வாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவரை காணவில்லை. இன்று அதிகாலை செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோயாளி மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 14 May 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து