Begin typing your search above and press return to search.
கடையநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
கடையநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையநல்லூர் சுடுகாடு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை கண்டனர்.
இது தொடர்பாக, கடையநல்லூர் மலம்பாட்டை தெருவை சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் ஷேக்மைதீன் @ ஜமாகான்(61) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.