தென்காசி அருகே கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது

தென்காசி அருகே கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது
X
தென்காசி அருகே கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மது, புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க, மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சாம்பவர்வடகரை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, சார்பு ஆய்வாளர் காசி விஸ்வநாதன் மகன் சுரேஷ் (21) என்பவர், கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், வேல்கனி போலீஸார் கைது செய்தனர். அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Tags

Next Story
ai marketing future