/* */

கடையநல்லூர் சாலை விபத்தில் திமுக பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்

கடையநல்லூரில் லாரி மோதி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி பாண்டியன் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கடையநல்லூர் சாலை விபத்தில் திமுக பிரமுகர்  பரிதாபமாக உயிரிழந்தார்
X

சாலை விபத்தில் பலியான கிருஷ்ணசாமி பாண்டியன்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி கர்ணம் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி பாண்டியன் (73). இவர் கடையநல்லூர் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளராகவும், தற்போது மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி தென்காசியில் இருந்து சொக்கம்பட்டிக்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார்.

அப்போது கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில், பின்னால் வந்த லாரி கிருஷ்ணசாமி பாண்டியன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த கிருஷ்ணசாமி பாண்டியன் தலையில் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த கிருஷ்ணசாமி பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி பாண்டியன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். பலியான கிருஷ்ணசாமி பாண்டியனுக்கு ரவி, கார்த்திக் என்ற மகன்களும், வசந்தி என்ற மகளும் உள்ளனர்.

Updated On: 30 Aug 2021 9:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு