/* */

கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் தற்போது மீண்டும் மஞ்சப்பை என்கிற நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினர் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் ஊராட்சியில் புத்தாண்டு முன்னிட்டு மஞ்சப் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரவண சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து ரவண சமுத்திரத்தை சேர்ந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு இரு முறை தங்கம் பெற்ற பத்தாம் வகுப்பு யோகா மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஸ்கேட்டிங் செய்துகொண்டே வீடு வீடாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு ஆசிரியர் குரு கண்ணன், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jan 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...