சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
X

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிவகங்கையில் மாவட்ட அளவில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில் இந்தபோட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது;-

1993-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2022-ஆம் ஆண்டு அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, முன்னேற்பாடாக, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டது.

இவ்விளையாட்டுப் போட்டியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், தொழிற் பயிற்சி நிலையங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் என 215 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும், உடலியக்க குறைபாடு உடையவர்கள் காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகிய பிரிவுகளில் 29 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அதனடிப்படையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற 14 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் சிறப்புப்பள்ளி தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Updated On: 24 Nov 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
  2. கந்தர்வக்கோட்டை
    பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
  3. லைஃப்ஸ்டைல்
    Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
  4. புதுக்கோட்டை
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
  5. கடையநல்லூர்
    உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
  6. லைஃப்ஸ்டைல்
    Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
  7. தர்மபுரி
    காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
  8. ஓசூர்
    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...
  10. தஞ்சாவூர்
    தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்