/* */

சிவகங்கை மாவட்டத்தில் நீரினை பயன் படுத்துவோர் சங்க தேர்தல் : மாவட்ட ஆட்சியர்

வருகின்ற 29.12.2022 ல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 12 முதல் 16-க்குள் மனு தாக்கல் செய்யலாம்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில்  நீரினை பயன் படுத்துவோர் சங்க தேர்தல் : மாவட்ட ஆட்சியர்
X

சிவகங்கை மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 29.12.2022 அன்று நடைபெறவுள்ளது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 12 முதல் 16-க்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 29.12.2022 அன்று நடைபெறவுள்ளது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 12 முதல் 16-க்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய வட்டங்களில், திட்டங்களின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 29-ல் நடைபெற உள்ளது.

இப்பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து டிசம்பர் 12 முதல் 16 வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.டிசம்பர் 19-ல் வேட்பு மனு பரிசீலனையும் மற்றும் வேட்பு மனு திரும்பப் பெறுதல் நடைபெறும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 29-ல் காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்று மாலை 04.00 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

சிவகங்கைக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), காளையார்கோவிலுக்கு சிவகங்கை வடிப்பக அலுவலர் ஃ துணை ஆட்சியர், மானாமதுரைக்கு சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர், இளையான்குடிக்கு சிவகங்கை மாவட்ட வழங்கல் அலுவலர், திருப்புவனத்திற்கு சிவகங்கை தனித்துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேவகோட்டைக்கு சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காரைக்குடிக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், திருப்பத்தூருக்கு சிவகங்கை மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்), சிங்கம்புணரிக்கு சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Dec 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்