/* */

தீபாவளிக்கு தரமான இனிப்புகள் தயாரிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தீபாவளிக்கு தரமான இனிப்புகள் தயாரிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தீபாவளிக்கு தரமான இனிப்புகள்  தயாரிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

தீபாவளி பண்டிகை கால பதார்த்தங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்பவர்கள், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, தரமான முறையில் உணவுப் பொருட்களை நுகர்வோர்களுக்கு வழங்கிட வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக செயற்கை நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் முழு உடல் நலத்துடனும், தொற்று நோய்கள் இல்லா வண்ணமும் இருப்பவர்களை பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு இடும்பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொது மக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும்.

உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிம எண் , பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

குறிப்பாக பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், (இனிப்பு மற்றும் காரவகைகள்) தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Updated On: 31 Oct 2023 10:28 AM GMT

Related News