/* */

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சமத்துவபுரம் கட்டிடப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

விழுப்புரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தந்தை பெரியார் சமத்துவபுரம் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரி அருகே சமத்துவபுரம் கட்டிடப் பணிகள்: அமைச்சர் ஆய்வு
X

சிவகங்கை அருகே சமத்துவபுர கட்டுமானப் பணிகளில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை அருகே சமத்துவபுர கட்டுமானப் பணிகளில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கூறியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் வீடு இல்லாதவர்களுக்கும் கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டத்தினை முன்னாள் முதல்வர் கருணாநிதி மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைமுறைக்கு கொண்டு வந்தார். அவ்வழியில், செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்திற்கு, தற்போது புத்துயிர் ஊட்டியுள்ளார்கள். இதன்மூலம் அனைத்துத்தரப்பினரும் ஏற்றத்தாழ்வின்றி சமமான முறையில் வசித்திடும் பொருட்டு முன்மாதிரியான கிராமத்தினை உருவாக்கிட வழிவகை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு மாநிலம், ஒரு நாடு, அமைதியாகவும் சாதிமத பேதமின்றி, அமைதிப் பூங்காவாக உருவெடுக்கும் நோக்கில், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக தந்தை பெரியார் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ,தமிழகத்தில் 180 சமத்துவபுரம் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாத வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக, விழுப்புரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தந்தை பெரியார் சமத்துவபுரம் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் ஏற்படுத்தப்பட்டு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான பயனாளிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளன.பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல், பொது விநியோகக்கடை, மரக்கன்றுகள் வளர்த்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள், விரைந்து முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவரஞ்சனி, சிங்கம்புணரி பேரூராட்சித்தலைவர் அம்பலமுத்து மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்