/* */

சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள் அமைக்கப்படும்: ஆட்சியர் தகவல்

2.5 ஏக்கர் பரப்பளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தனிநபர் திறந்தவெளி கிணறுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள் அமைக்கப்படும்: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி.

விவசாயிகளுக்கு திறந்த வெளி கிணறு அமைத்துத்தரப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2.5 ஏக்கர் பரப்பளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தனிநபர் திறந்தவெளி கிணறுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுஃகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 2.5 ஏக்கர் பரப்பளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தனிநபர் திறந்தவெளி கிணறுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளது. மாவட்டத்திலுள்ள சிறுஃகுறு விவசாயிகள், தங்களது நில உடமை ஆவணங்கள், கிணறு தோண்டப்படவுள்ள இடத்தின் பரப்பளவு மற்றும் புல எண் விவரங்கள், புவியியல் வல்லுநர் நீருற்று சான்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்ட அடையாள அட்டை மற்றும் சிறுஃகுறு விவசாயிக்கான சான்று ஆகியவற்றுடன் தொடர்புடைய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து, அனுமதி பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிவகங்கை-கா. ரெத்தினவேலு-7402608356- 04575-240272

காளையார்கோவில்-மு. சத்தியன் -7402608366- 04575-232225

மானாமதுரை- கு. பர்ணபாஸ் அந்தோனி -7402608370-04574-258016

திருப்புவனம்-கு.ஜோசப் அருள்ராஜ்-7402608371-04574-265224

இளையான்குடி-க. சாந்தி-7402608372-04564-265296

தேவகோட்டை-ரெ. மாலதி-7402608373-04561-272224

கண்ணங்குடி-நா. பழனியம்மாள்--7402608374-04561-274228

சாக்கோட்டை-ஆ. ஹேமலதா--7402608376-04565-282239

கல்லல்-ஆ. அழகுமீனாள்-7402608375-04565-284221

திருப்பத்தூர்-எஸ். ஜஹாங்கீர்-7402608377-04577-266131

சிங்கம்புணரி-செ. பாலசுப்பிரமணியன்-7402608378-04577-242128

எஸ்.புதூர்-க. அங்கயற்கண்ணி.

Updated On: 23 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...