/* */

சிவகங்கை மாவட்டத்தில் மே 26 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில்  மே 26 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

பைல் படம்

சிவகங்கை மாவட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; வருகின்ற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களைத் தவிர, பெரும்பாலும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புள்ள கருத்துகளை மட்டும் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு இக்கூட்டங்களுக்கு விவசாயிகள் அழைக்கப்படுகின்றனர்.இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தபால் மூலமும் செய்தித்தாள்கள் மூலமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; வருகின்ற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற உள்ளது.

மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், பங்கேற்கும் இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


Updated On: 18 May 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்