/* */

மனித நேய வார விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்த சிவகங்கை ஆட்சியர்

மனித நேய வார விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

மனித நேய வார விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்த சிவகங்கை ஆட்சியர்
X

பரிசு பெற்ற மாணவ மாணவிகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

மனிதநேய வார விழாவினை முன்னிட்டு, பள்ளி மாணாக்கர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற 81 மாணாக்கர்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை, மனித நேய நிறைவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா வழங்கினார்.

சிவகங்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தில் மனித நேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் எவ்வித பாகுபாடுன்றி ஒற்றுமையுடனும் மனிதநேயத்துடனும் வாழ்ந்திடும் பொருட்டு, மனிதநேய வார நிறைவு விழா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடை பிடித்தால், சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து, மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் விதமாக தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். அதேபோல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் முன்வர வேண்டும். அப்பொழுதுதான் மனிதநேயம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பயன்பெறும்.

எனவே, எவ்விதப்பாகுபாடின்றியும்இ எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவி செய்யும் எண்ணம்தான் மனித நேயத்திற்கு அடிப்படையாக திகழும். அதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தும் விதமாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திடல் வேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப் பெறவேண்டும் என்ற அடிப்படையில், அரசின் சார்பில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, அத்திட்டங்களை பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் முறையாக அறிந்து கொண்டு, அத்திட்டங்கள் மூலம் முழுமையாக பயன்பெற்று, வாழ்வில் சிறந்து விளங்கிடுவதற்கு அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், இமனிதநேயம் குறித்து பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களின் போச்சுத்திறன் வாயிலாக விரிவாகவும், சிறப்பாகவும் இங்கு எடுத்துரைத்தனர். இதனை கருத்தில் கொண்டு, எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட்டு பிறருக்கு உதவிடும் மனப்பான்மையினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இவ்விழாவில், பள்ளிகள் அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, அழகு கையெழுத்துப் போட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பெற்ற அதிகரம் மற்றும் உஞ்சனை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, மல்லல் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, மல்லல் அதிகரம் மற்றும் உஞ்சனை அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, சேர்ந்த 81 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் 02 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையர் (கலால்) ஆர்.ரெங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியளார் (நிலம்) சரவணப்பெருமாள், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) கோ.முத்துச்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக்குழு, ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு, தூய்மை பணிபுரிவோர்களுக்கான கண்காணிப்புக்குழு, ஆகிய குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் அரசு வழக்கறிஞர் (வன்கொடுமை) துஷாந்த் பிரதீப்குமார், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சேவுகன், எல்.ஆறுமுகம், சேது, அ.பூமிநாதன், செல்வக்குமார் மற்றும் விடுதிகாப்பாளர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Jan 2024 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு