/* */

சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா சிட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஏப்.22) நடைபெறவுள்ள கணினி திருத்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் கணினி  பட்டா சிட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) பட்டா தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள நடைபெறவுள்ள கணினி திருத்தசிறப்பு முகாமினை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி. தெரிவித்துள்ளார்.

அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 22.04.2022 அன்று தேவகோட்டை வட்டத்தில் எழுவன்கோட்டை, களத்தூர் மற்றும் பூசலாக்குடி குரூப்-நம்பியூர் கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் ஒழுகமங்கலம் மற்றும் இரணசிங்கபுரம் கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் பில்லூர் மற்றும் இலுப்பக்குடி கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் காளையார்கோவில் கிராமத்திலும் நடைபெறவுள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்அடைந்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 21 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!