மது போதையில் பெண்ணிடம் இழிவாக நடந்த கல்லூரி மாணவர்கள் சிசிடிவி காட்சி முலம் கைது

மது போதையில் பெண்ணிடம் இழிவாக நடந்த கல்லூரி மாணவர்கள் சிசிடிவி காட்சி முலம் கைது

காரைக்குடியில் உள்ள  ஹோட்டலில் மாணவர்கள்  அடிதடி ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி

ஹோட்டல் சிசிடிவி காட்சியை பார்த்த காரைக்குடி டிஎஸ்பி வினோஜி சம்பவத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை போலீஸார் கைது செய்தார்

மது போதையில் பெண்னிடம் இழிவாக நடந்து கொண்ட கல்லூரி மாணவர்களை சம்பவம் நடந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சியை வைத்து போலீஸார் தாமாக முன்வந்து குற்றவாளிகளை இரவோடு இரவாக கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அசோக் கோபிநாத் என்ற மாணவன் புது பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்காக தனது கல்லூரி நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து சாப்பிடுவதற்கு காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர் அப்போது கணவன்-மனைவி உணவருந்த ஓட்டலுக்கு வந்துள்ளனர். கணவர் உள்ளே செல்ல மனைவி வாசலில் நின்று கொண்டிருந்தாராம். அப்பொழுது மதுஅருந்திய மாணவன் முகமது சல்மான் கான் மதுபோதையில் தள்ளாடியபடி வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணின் தலையில் வைத்திருந்த பூவை இழுத்து சில்மிஷம் செய்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நடந்த சம்பவத்தை ஓட்டலுக்கு உள்ளே சென்று கணவனிடம் கணவனிடம் கூறினார். இதையடுத்து மனைவியிடம் சில்மிஷம் செய்த மாணவனிடம் கேட்டபோது, மதுபோதையில் இருந்த முகமதுசல்மான் கான், பெண்ணின் கணவரை தாக்க முயன்றார். மேலும், உடனிருந்த சக மாணவர்களும் அந்த பெண்ணின் கணவரை சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதனை சற்றும் எதிர்பார்காத சப்ளையர்கள் நடந்த சம்பவத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் விலக்கிவிட முயற்சித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அங்குமிங்கும் ஓடினார். இந்த அடிதடி ரகளை நடந்தது சம்பவம் எல்லாம் முடிந்து தாக்கப்பட்ட பெண்ணின், கணவரும் இந்தச்சம்பவம் வெளியே தெரிய வேண்டாம். தெரிந்தால் சங்கடமான சூழ்நிலை ஏற்படும் எனக்கூறி, போலீசில் புகாரும் வேண்டாமென சென்றுவிட்டனர். இதனால், கடைக்காரரும் பாதிக்கப்பட்டவர்களே வேண்டாம் என நினைக்கும்போது சரி என அவரும் விட்டு விட்டார். இந்நிலையில், தகராறு நடந்தபோது இரு மாணவர்களின் செல்போன் கீழே விழுந்துள்ளது. அதை கடை உரிமையாளர் எடுத்து வைத்திருந்தார்.ஆனால், எதுவுமே தெரியாதது போல காரைக்குடி அழகாபுரம் காவல்நிலையத்திற்கு சென்ற மாணவர்கள், ஹோட்டலுக்கு சாப்பிட போன போது, அங்கு தங்களது செல்போன் தொலைந்து விட்டது. எனவே கடை உரிமையாளர் அதை எடுத்து வைத்திருப்பார். வாங்கித் தாருங்கள் என வாய்மொழியாக தெரிவித்தனர்.

காவல்நிலையத்திலிருந்து, ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ஹோட்டலில் நடந்த அடிதடி, ரகளை குறித்து தகவல் தெரிய வந்தது. இதையடுத்து, ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்த காரைக்குடி டிஎஸ்பி வினோஜி, உடனடியாக கடை உரிமையாளரிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, இரவோடு இரவாக சம்பவத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் 7 மாணவர்களை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களே புகார் அளிக்காத போதும், தாமாக வந்து புகாரை பெற்று குற்றவாளிகளை கைது செய்த காரைக்குடி டிஎஸ்பி யை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர் .


Tags

Next Story