/* */

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.7.81 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.7.81 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.7.81 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மரக்கன்றுகள் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.7.81 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 482 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் தமிழ் மன்றம் சார்பில் மாநில அளவில் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும், பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசுப்பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளையும் மற்றும் அண்ணல் அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000மும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000 மும் என, பரிசுத் தொகைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் 01 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலையினையும், தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் 01 பயனாளிக்கு ரூ.18,000 மதிப்பீட்டிலான மானியத் தொகைகான ஆணையினையும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.9,000 மதிப்பீட்டிலான மானியத்தொகைகான ஆணையினையும்,

தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தின் மூலம் மானாமதுரையில் மண்பாண்டம் தொழில் செய்யும் 25 தொழிலாளர்களுக்கு தலா ரூ.20,400வீதம் மொத்தம் ரூ.5.10 இலட்சம் மதிப்பீட்டிலான சைலா வீல் (திருகை) மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் 118 குழந்தைகளுக்கு ரூ.1.44 இலட்சம் மதிப்பீட்டில் உதவி பராமரிப்பு நிதி என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.7.81 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் அதன் பயன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 July 2023 12:14 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு