/* */

அரசு போக்குவரத்து கழகத்தில் டயர் பற்றாக்குறை: அன்புமணி ராமதாஸ்

அரசு போக்குவரத்து கழகத்தில் டயர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

அரசு போக்குவரத்து கழகத்தில் டயர் பற்றாக்குறை: அன்புமணி ராமதாஸ்
X

அன்புமணி ராமதாஸ்

அரசு போக்குவரத்து கழகங்களில் டயர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் எம்பி தனது ட்விட்டரில்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடுமையான டயர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடனடியாக டயர்கள் வாங்கப்படாவிட்டால், 40% பேருந்துகளை தீபாவளிக்கு இயக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது உண்மையானால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்

போதிய டயர்கள் இல்லாததால் அரசுப் பேருந்துகளில் ரீ-ட்ரெட் செய்யப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தேய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 34,000 டயர்கள் வாங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை வாங்கப்படாததே சிக்கலுக்குக் காரணம். உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்

Updated On: 26 Oct 2021 3:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் முகத்தை பளிச்சிட வைக்கும் கடலை மாவு பேஸ்பேக்; எப்படி யூஸ்...
  2. லைஃப்ஸ்டைல்
    இரவு நேர மாரடைப்பைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான இரவு உணவுகள் என்னென்ன?
  3. குமாரபாளையம்
    பாராளுமன்ற தேர்தல் நிறைவு; அரசியல் கட்சி வேட்டிகள், துண்டுகள்...
  4. அரசியல்
    "சில நேரங்களில் அரசாங்கங்கள் ஒரு நாள் மட்டுமே நீடிக்கும்": மம்தா...
  5. நாமக்கல்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையங்களை தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு மருதாணி பயன்படுத்துகிறீர்களா?
  7. குமாரபாளையம்
    கலிக்கம் சித்த வைத்திய முகாம்
  8. சோழவந்தான்
    பாலமேடு அருகே, வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய பொங்கல் விழா
  9. திருப்பரங்குன்றம்
    பதவி வரும்போது அடக்கம் வரவேண்டும்; திருச்சி கல்யாணராமன் அறிவுரை
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, சுற்றுச்சூழல் தின விழா