/* */

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த இருவர் கைது

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை மற்றும் சாராய ஊறல் போட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட வெங்கடேசன், பூச்சி என்கிற அரபுலி.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ஏற்காடு காவல்நிலைய போலீசார் மலைக்கிராமங்களில் அவ்வபோது அதிரடி சோதனை மேற்கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரையும், சாராய ஊறல் போட்ட வழக்கில் குண்டூர் கிராமத்தை சேர்ந்த பூச்சி என்கிற அரபுலி என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 1 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...