/* */

ஆசையாக ஏற்காடு கிளம்பிய பயணிகள்... தடுத்து திருப்பி அனுப்பிய போலீசார்

ஏற்காடு சென்ற சுற்றுலாப் பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இதனால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

HIGHLIGHTS

ஆசையாக ஏற்காடு கிளம்பிய பயணிகள்...  தடுத்து திருப்பி அனுப்பிய போலீசார்
X

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி, கோடை வாசஸ்தலமான ஏற்காடு, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளையே நம்பியுள்ள சாலையோர வியாபாரிகள், தங்கும் விடுதிகள், வாடகை ஓட்டுனர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவரங்களை அறியாமல் ஏற்காட்டிற்கு படை எடுக்கும் சுற்றுலாப் பயணிகளை, அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆர்வமுடன் ஏற்காடு செல்ல வந்திருந்த சுற்றுலா பயணிகள் , மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Updated On: 20 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...