Begin typing your search above and press return to search.
சேலம்: தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
சேலம் அயோத்தியாபட்டினம் அருகே, தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சசிகுமார் (39). இவர் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் கார் பழுது செய்யும் பட்டறை வைத்துள்ளார். இதனால் கார் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஆயில், டீசர் உள்ளிட்ட பொருட்கள் அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் குடோனில் வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று திடீரென குடோனில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் தீ அதிக அளவில் பற்றியது. தகவல் அறிந்து விரைந்து சென்ற சேலம் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், 3 லட்சம் மதிப்பில் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.