மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,200 கன அடியாகக் குறைவு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,200 கன அடியாகக் குறைவு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 79 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு 1,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 55.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 55.00 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.10 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story