/* */

'டிமிக்கி' கொடுத்து தப்பிய டிரைவர் - காரை மட்டும் கண்டுபிடித்த போலீசார்

சேலம் அருகே, பல்வேறு தடுப்புகள் அமைத்து துரத்தி சென்றும் தப்பியச் சென்ற காரை, ஒருவழியாக போலீசார் கண்டுபிடித்தனர்.

HIGHLIGHTS

டிமிக்கி கொடுத்து தப்பிய டிரைவர் -  காரை மட்டும் கண்டுபிடித்த போலீசார்
X

சேலம் அருகே பிடிபட்ட கார்

சேலம் அருகே உள்ள கருப்பூர் சுங்கசாவடியில், அண்மையில் சொகுசு கார் ஒன்று நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழியில் காரை நிறுத்த காவல்துறையினர் முற்பட்டனர். ஆனால், காரை நிறுத்தாமல் ஓட்டுனர் அதிகமாக சென்றுள்ளார்.

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். காவல்துறையினர் மீது வாகனத்தை மோதுவது போல் இயக்கி, அங்கிருந்து சொகுசு காருடன் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். பின்னர் காவல்துறை ரோந்து வாகனங்கள் மூலம் பின்தொடர்ந்து சென்றபோதும், கார் மாற்று வழியில் சென்று தப்பியது. இதனைத் தொடர்ந்து தப்பி சென்ற காரினை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், அமானி கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில், சந்தேகத்துக்குரிய வகையில் கார் ஒன்று நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து காவல்துறையினர் விசாரித்து, காரை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர், வழக்கு விசாரணை, கருப்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

காரின் எண்ணை வைத்து சோதனை செய்தபோது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சோகாராம் என்பவரின் பெயரில் உள்ளது தெரியவந்தது. உரிமையாளரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரில் ஏதாவது கடத்தப்பட்டதா? அல்லது ஏதாவது குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பி வந்தார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு