/* */

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18ம் தேதி) விடுமுறை

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18ம் தேதி) விடுமுறை
X

மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையம் 5.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வீரகனூரில் 2.5 செ.மீ., ஆத்தூர் 4.8 செ.மீ, தம்மம்பட்டி 4.2 செ.மீ., கெங்கவல்லி 4 செ.மீ., ஏற்காடு பகுதியில் 1.4 செ.மீ, சேலம் மாநகராட்சி பகுதியில் 0.76 செ.மீ, மேட்டூர் 0.14 செ.மீ, எடப்பாடியில் 0.22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 27.3 செ. மீ மழை பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...