தேவூர் அருகே கோனேரிபட்டி அக்ரஹாரம் பகுதியில் நெல் வயல்வெளி பயிற்சி

தேவூர் அருகே கோனேரிபட்டி அக்ரஹாரம் பகுதியில் நெல் வயல்வெளி பயிற்சி
X

புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில்,  ஊராட்சி மன்ற தலைவர் கீதா பாலு தலைமையில், சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் சுதா மற்றும் வேளாண்மை துறையினர்,  விவசாயிகளுக்கு நெல் வயலில் பயிற்சி அளித்தனர்.

தேவூர் அருகே கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி பகுதியில், நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளி பயிற்சி அளிக்கப்பட்டது.

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் பாசன பகுதிகளில், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில், விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, முதல் வயல்வெளி பயிற்சி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா பாலு தலைமையில் சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் சுதா மற்றும் வேளாண்மை துறையினர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெல் வயலில் பயிற்சி அளித்தனர்,

இதனையடுத்து இரண்டாவது முறையாக கோனேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி பகுதியில், விவசாயிகளுக்கு விதைத்தேர்வு முதல், அறுவடை காலம் வரை உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், மண் மாதிரி எடுத்தல், மற்றும் உயிர் உரம், விதை நேர்த்தி பற்றி, சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் சுதா தலைமையில், துணை வேளாண்மை அலுவலர் முரளிதரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனிவாசன், ரமேஷ் உள்ளிட்ட வேளாண்மை துறையினர் கலந்து கொண்டு செயல் விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?