/* */

சேலம், திருப்பூரில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம்!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சேலம், திருப்பூர் மாவட்டங்களில், வேளாண் சட்டம் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும், 3 வேளாண் சட்டங்களின் நகல் எரிப்பு போராட்டத்தை, விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வேளாண்சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டமானது சேலம் மாநகரம் மற்றும் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

திருப்பூரில்...

இதேபோல், திருப்பூர் மாவடத்திலும், திருப்பூர் நகரிலும் போராட்டங்கள் நடைபெற்றன. திருப்பூரில், பல்லடம் சாலை, அகத்தியன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டமும், சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முக சுந்தரம், மாநில பொதுச்செயலாளர் முத்து விசுவநாதன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தாராபுரம் சிவக்குமார், குண்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் குங்குமம்பாளையம் முத்துச்சாமி மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jun 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!