/* */

சேலம் அருகே கல்லால் தாக்கி பெண்கூலித்தொழிலாளி கொலை

மதுபோதையில் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்ட கோவிந்தராஜை தட்டிக்கேட்ட கூலித்தொழிலாளி விஜயாவை கல்லால் தாக்கியுள்ளார்

HIGHLIGHTS

சேலம் அருகே கல்லால் தாக்கி பெண்கூலித்தொழிலாளி கொலை
X

சேலம் அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி விஜயா

சேலத்தில் மதுபோதையில் பெண்கூலித்தொழிலாளி ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற கூலித்தொழிலாளி நாள்தோறும் மது அருந்திவிட்டு அப்பகுதி மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போன்று நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டின் முன்பாக பிரச்னை செய்து கொண்டிருந்த கோவிந்தராஜை, அப்பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் கல்லால் தாக்கியதில், படுகாயமடைந்த விஜயா சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் உயிரிழந்தார். போதையில் இருந்த கோவிந்தராஜை சுற்றிவளைத்து ஊர் மக்கள் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டது. அழகாபுரம் காவல்துறையினர், கோவிந்தராஜை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுபோதையில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்