/* */

அசாமில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

அசாமில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
X

பயணிகளின் வசதிக்காக அசாம் மாநிலம் சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி சில்சார் - கோவை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் வருகிற 22-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு விசாகப்பட்டிணம், ராஜமுந்திரி, விஜயவாடா, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வெள்ளிக்கிழமை காலை 8.27 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மதியம் 12 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை- சில்சார் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் வருகிற 27-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவையில் இருந்து இரவு 11. 45 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக திங்கட்கிழமை அதிகாலை 00.02 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 00.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டிணம் வழியாக புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு சில்சார் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் நடைபெறுகிறது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 Jun 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!