/* */

சேலத்தில் நீட் பயிற்சி மையத்திற்கு சீல், 5000 அபராதம்

சேலத்தில் தடையை மீறி நடத்தப்பட்ட நீட் பயிற்சி மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் 5000 அபராதம் விதித்து, சீல் வைத்தனர்

HIGHLIGHTS

சேலத்தில் நீட் பயிற்சி மையத்திற்கு சீல், 5000 அபராதம்
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள்,கல்லூரிகள்,பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் செயல்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் தடையை மீறி, 200 மாணவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பயிற்சிக்கு வந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து நீட் பயிற்சி மையத்தை மூடி சீல் வைத்தனர். மேலும் அரசின் தடையை மீறி நீட் பயிற்சி மையம் நடத்திய உரிமையாளர் சிவகுமாருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் பயிற்சி மையத்தை நடத்தி வந்த உரிமையாளரை கடுமையாக எச்சரித்தனர்.

Updated On: 28 April 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...