/* */

சேலம் ஆசிரியர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சேலம் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 8 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவுபெற்றது.

HIGHLIGHTS

சேலம் ஆசிரியர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
X

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய ஆசிரியர் வீடு.

சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் அருகே உள்ள தாழ்வெள்ளம் உண்டு உறைவிடப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டனர்.

இதுமட்டுமன்றி தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கியதாக 56 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திலும் தலைமை ஆசிரியர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் புகார்களை அடுத்து அவரது வருவாய் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்டது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான விசாரணையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் நெடுஞ்சாலைநகரில் வசிக்கும் வெங்கடேசனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் பிடியில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Sep 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்