/* */

சேலத்தில் 354 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்

சேலம் பகுதிகளில் 354 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

HIGHLIGHTS

சேலத்தில் 354 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்
X

சேலத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்

கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடும் வகையில் சேலம் மாநகராட்சி சார்பில் 354 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழவகைகள் மற்றும் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டலத்தில் 136 காய்கறி வாகனங்கள், 4 மளிகை பொருட்கள் வாகனங்கள் என 140 நடமாடும் விற்பனை வாகனங்களும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 43 காய்கறி வாகனங்கள், 20 மளிகை பொருட்கள் விற்பனை வாகனங்கள் என 63 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் அம்மாபேட்டை மண்டலத்தில் 27 காய்கறி விற்பனை வாகனங்கள் 3 மளிகை பொருட்கள் விற்பனை வாகனங்கள் என மொத்தம் 74 நடமாடும் விற்பனை வாகனங்களும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 62 காய்கறி வாகனங்கள், 15 மளிகை பொருட்கள் விற்பனை வாகனங்கள் என 77 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீட்டின் அருகே காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்கள் குறைந்த விலையில் தேவைக்கேற்ப பெற்றிடும் வகையில் 154 நடமாடும் வாகன விற்பனை நிலையங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் வாகன விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் நலன் மட்டுமின்றி பொது நலன் கருதி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், நோய்த்தொற்று தடுக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் தமது பொறுப்பினை உணர்ந்து முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் எனவும், அனைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தோடு ஒத்துழைத்து நோய்த்தொற்று பரவலை தடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 23 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!