/* */

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்

ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக, சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் நள்ளிரவு முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

HIGHLIGHTS

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்
X

சேலம் இரும்பாலை செல்லும் சாலையில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது. மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.


இதனிடையே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மருந்து விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டதால் சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

எனினும், வெளியூரில் இருந்து வந்திருந்த 500 க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு முதலே மருந்துக்காக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதால் காத்திருக்கும் அனைவருக்கும் மருந்து கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தட்டுபாடு இன்றி மருந்து கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 10 May 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்