/* */

சேலம் கோவிலுக்கு ரங்கசாமி வருகை- முதல்வராக பதவி ஏற்கும் முன்பு வழிபாடு

புதுவை முதல்வராக பொறுப்பேற்கும் முன்பாக, சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, அமைச்சரவை பட்டியலை வழிபட்டார்.

HIGHLIGHTS

சேலம் கோவிலுக்கு ரங்கசாமி வருகை- முதல்வராக பதவி ஏற்கும் முன்பு வழிபாடு
X

புதுவை சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், 16 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பெரும்பான்மை பலம் கிடைத்தத்டை அடுத்து, புதுச்சேரியில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, புதுச்சேரியின் முதலமைச்சராக நான்காவது முறையாக, என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு இன்று வருகை தந்த ரங்கசாமி, தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழ் மற்றும் அமைச்சரவை பட்டியலை வைத்து வழிபாடு நடத்தினர்.

முன்னதாக, கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவிலில் அன்னதானம் உட்கொண்டார். ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, அப்பா பைத்தியம் சாமி கோவிலில், கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வைத்து வழிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 May 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.