Begin typing your search above and press return to search.
வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
சேலம் அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி சுந்தர் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் தனது தாயுடன் வடக்கு அழகாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் சாமி கும்பிடச் சென்றார். அங்கு ஜானகிராமனின் சட்டை பையில் இருந்து ரூ. 1,200 பணத்தை 3 பெண்கள் நைசாக திருடினர். இதனை பார்த்த அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த 3 பெண்களையும் மடக்கி பிடித்தார். பின்னர் அழகாபுரம் போலீசில் மூவரையும் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவை சாய்பாபா கோயில் தெருவை சேர்ந்த மாரி மனைவி முனியம்மாள், முருகன் மனைவி பாப்பாத்தி, இசக்கி மனைவி கவிதா ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.