/* */

பேருந்துகளை தவற விட்டதால் பயணிகள் பரிதவிப்பு

சேலம் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்துகளை தவறவிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று இரவு முழுவதும் தவித்தனர்

HIGHLIGHTS

பேருந்துகளை தவற விட்டதால் பயணிகள் பரிதவிப்பு
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக இரவு நேர ஊரடங்கையொட்டி இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

சில இடங்களில் சிறிது காலதாமதமாக கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நீண்ட தூரம் செல்லும் ஊர்களுக்கு காலையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு மாலை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.

பேருந்துகளை தவறவிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையத்திலேயே நேற்று இரவு முழுவதும் தவித்தனர். அதிகாலையில் மீண்டும் பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, அங்கிருந்த நடைமேடைகளில் ஆங்காங்கே படுத்து தூங்கினர்.

இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின. இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக மாநகரில் கலெக்டர் அலுவலகம் அருகே, அஸ்தம்பட்டி ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

3-வது நாள் என்பதால் ஊரடங்கு உத்தரவை மீறி வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்ததுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 23 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...