/* */

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு: நகை வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் கடைகளும், சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கடைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

HIGHLIGHTS

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு: நகை வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
X

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் 3 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தங்க நகை வணிகர்கள் 

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தங்க நகை வணிகர்கள் மூன்று மணிநேரம் கடைகளை அடைத்து அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஹால்மார்க் விதியான HUID தரக்கட்டுப்பாடு கடந்த ஜூன் மாதம் 16 -ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நகை விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கடைகளும், சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கடைகளும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தியதால், நகை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கு கால தாமதம் ஏற்படுவதாக, தங்க நகை வணிகர்கள் தெரிவிக்கின்றனர். புதிய தரநிர்ணயத்தை வரவேற்பதாகவும், ஆனால் அதில் இருக்கக் கூடிய நடைமுறை சிக்கல்களை நீக்க, மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை வணிகர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 23 Aug 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி