/* */

மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைந்த மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X

சேலம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாண்டியன் என்பவருக்கு மூன்று சக்கரம் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

சேலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். விபத்து ஒன்றில் காலில் அடிப்பட்டு ஊனமடைந்த இவர். 3 சக்கர வாகனம் மற்றும் மாத உதவித்தொகை கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை பலனில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை மனுவாக வழங்கினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விரைவில் மாத உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததோடு மனு வழங்கிய அரை மணி நேரத்தில் அவருக்கு 3 சக்கர வாகனத்தை வழங்கினார். பின்னர் ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றார்.

Updated On: 22 Jun 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!