/* */

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஒருவர் கைது

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஒருவர் கைது
X

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை மற்றும் சேலம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை தரவுள்ள நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிலும், சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானது. சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேலம் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனை முடிவில் வெடிபொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்படாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே தொலைபேசி எண்ணின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருப்பூரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்காக முதல்வர் நாளை சேலத்திலிருந்து திருப்பூர் செல்ல உள்ள நிலையில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 Feb 2021 5:05 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு