சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க எதிர்ப்பு

பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து இரும்பாலை பணியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நிதி பற்றாக்குறையையும், இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதையும் காரணம் காட்டி சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்பிஎப் இரும்பாலை தொழிற்சங்கம் சார்பில் நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தொழிற்சங்க பொதுச்செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்துகொண்டு இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும், காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu