/* */

சேலம் மாநகராட்சி கொரோனோ சிகிச்சை மையங்களில் 550 படுக்கைகள் காலி

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கொரோனோ சிகிச்சை மையங்களில் 550 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல்

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி கொரோனோ சிகிச்சை மையங்களில்  550 படுக்கைகள் காலி
X

சேலம் மாநகராட்சி பகுதிகளில், கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொரோனோ சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல் மையங்களில், காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சோனா கல்லூரி மையத்தில் 54 படுகைகளும், தொங்கும் பூங்கா பகுதியில் உள்ள மையத்தில் 122 படுக்கைகளும், காந்தி மைதானத்தில் உள்ள மையத்தில் 79 படுக்கைகளும், அரசு மகளிர் கல்லூரி சித்தா மையத்தில் 125 படுக்கைகளும், காலியாக உள்ளன.

அதேபோல், பொன்னம்மாபேட்டை ஐஐஎச்டி மையத்தில் 76 படுக்கைகளும், மணியனூர் பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் 94 படுக்கைகள் என மொத்தம் 550 படுக்கைகள் காலியாக உள்ளது என்றும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனை செல்லும் முன் கொரோனோ வகைப்படுத்தும் மையத்திற்கு நேரடியாகச் சென்று தங்களை வகைப்படுத்தி, சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று, சேலம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 15 Jun 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  2. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  3. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  4. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  5. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  6. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  8. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  10. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...