அரசியல்வாதிகள் தேர்தலை பற்றி சிந்திப்பார்கள்; தலைவர்கள்தான் தலைமுறைகளை பற்றி சிந்திப்பார்கள் - சீமான்.

சேலம் தாதகாபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடாக இந்தியா திகழ்வதாகவும், அதிலும் அதிகம் நீரை உறிஞ்சும் மாநிலம் தமிழகம்தான் என தெரிவித்த அவர் இதே நிலை நீடித்தால் தமிழகம் நீரற்ற நகரம் ஆகிவிடும் என்றார்.
கல்வி மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தும் தனியார் மயமாகி விட்டதோடு அரசின் கொள்கையும் சந்தை கொள்கையாக இருப்பதாக தெரிவித்த அவர், நாளுக்கு நாள் கிராமங்கள் காலியாகி கொண்டே வருவதாகவும் நகரங்கள் பெருகிக்கொண்டே போவதாகவும் கூறினார்.
நீர் வழிப்பாதையை சீரமைத்து நிலத்தடி நீரை சேமிப்பதோடு அரசே கூட்டுப் பண்ணையைத் துவங்கி விவசாயிகள் அனைவரையும் அரசு ஊழியராக்கினால் விவசாயம் செழிக்கும் என்றார்.
கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் மாறி மாறி தமிழகத்தில் ஜாதி ரீதியாக மக்களை பிரித்து ஆளுவதாக குற்றம்சாட்டிய அவர் நாம் தமிழர் கட்சி மக்களை ஜாதி மத பேதமின்றி அனைவரையும் ஒருங்கிணைக்கிறது என்றார்.
உங்களை நம்பி நிற்கும் நமது வேட்பாளர்களுக்கு துரோகம் செய்து விடாதீர்கள்; லஞ்சம் ஊழல் போன்ற தவறான அரசாங்கம் உருவாகாமல், தூய அரசாங்கம் உருவாக விவசாய சின்னத்தில் அனைவரும் வாக்களியுங்கள் என்று பேசினார்.
மேடையில் இம்ரான்கான் - மெஹதாஜ்பானு தம்பதியின் 5 மாத பெண் குழந்தைக்கு அமினா என பெயர் சூட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu