பாதுகாப்பு காேரி கிச்சிப்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பாதுகாப்பு காேரி கிச்சிப்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
X

கிச்சிப்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

சேலம் கிச்சிப்பாளையம் குப்பை மேடு அருகில் உள்ள ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் தாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல், சுற்றுப்புற சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் அங்கு குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், திறந்த வெளியில் இளைஞர்கள் மது அருந்துவதோடு கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது.

இதனால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், இரவு நேரத்தில் ஆண்களும், பெண்களும் பணிக்குச் சென்று எளிதாக அச்சமின்றி வீட்டிற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai personal assistant future