/* */

கொரோனாவுக்கு நண்பன் பலி: வேதனையில் காந்தி சிலையிடம் முறையிட்டவரால் பரபரப்பு!

சேலத்தில் கொரோனாவால் நண்பனை இழந்தை சோகம் தாங்காமல், காந்தி சிலையிடம் வந்து, அனைவரையும் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சேலம் செவ்வாய்பேட்டை பகுதி சேர்ந்தவர் காமராஜ்(46). இவர், ஆயுத எழுத்து தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் வழக்கறிஞர் கந்தசாமி(45) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நண்பர் உயிரிழந்த துக்கம் தாங்கமுடியாத காமராஜ், கதறியழுதார். பின்னர், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு வருகை தந்த காமராஜ், சிலையின் அமைந்துள்ள மேடையின் மீது ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சித்தார்.

மேலும் நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏழை மக்களுக்கு மருந்துகள் கிடைக்க வேண்டும், மக்களை காப்பாற்றுங்கள் என்று காந்தி சிலையிடம் பேசி முறையிட்டார்.

பின்னர் தகவலறிந்து வந்த சேலம் மாநகர டவுன் காவல் துறையினர் ஊரடங்கு நேரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கொரோனா பாதிப்பால் நண்பர் உயிரிழந்த துக்கம் தாங்கமுடியாமல் காந்தி சிலைக்கு வந்த நபர் உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 11 May 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!