/* */

பசியோடு வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பசியோடு வாடுபவர்களுக்கு செவ்வாய்பேட்டை போலீசார் உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

பசியோடு வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்!
X

பசியோடு வாடும் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்.

சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் சாலைகள் வெறிச்சோடியது. பொதுப் போக்குவரத்து முடங்கியது. வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் கொரானா நோயாளிகளை அனுமதிக்க வரும் உறவினர்கள் உணவகம் இல்லாததால் பசியோடு இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையோர வாசிகள் ஆதரவின்றி உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்ட சேலம் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தனர். இதனடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட உணவுப் பொருளுடன் காவல்துறை வாகனத்தில் வந்த அவர்கள் சாலையில் வருவோரும் போவோரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளி உறவினர்களையும் அழைத்து மதிய உணவு வழங்கினர். எதிர்பாராதவிதமாக காவல்துறையினர் அழைத்து மதிய உணவு வழங்கியது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான காவல் அதிகாரிகள் இந்த சமூக சேவையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்